search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நேரு பூங்கா"

    • இயற்கை எழில் கொஞ்சும் இப்பூங்கா காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். இங்கு காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள் பொழுதை கழித்துச் செல்கின்றனர்.
    • சமூக விரோதிகளின் கூடாரமாக இப்பூங்கா திகழ்கிறது. குறிப்பாக மது குடித்து விட்டு, உட்காருவதற்காக அமைக்கப்பட்டுள்ள இருக்கையை ஆக்கிரமித்து படுத்து தூங்குகின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சி பஸ் நிலையம் எதிரே நேரு- எம்.ஜி.ஆர். பூங்கா உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இப்பூங்கா காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். இங்கு காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள் பொழுதை கழித்துச் செல்கின்றனர்.

    இந்த பூங்கா அருகே கமலாலய குளம் உள்ளது. குளத்தை யொட்டி வரலாற்று சிறப்பு வாய்ந்த மலைக்கோட்டை உள்ளது. பொதுமக்கள் பூங்காவில் அமர்ந்து மலைக்கோட்டை, கமலாலய குளத்தை ரசித்து செல்கின்றனர். இப்பூங்காவில் சிறுவர்களை கவரும் வகையில் பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடவசதி இல்லாத நிலை உள்ளது.

    கடந்த 10 வருடங்களுக்கு முன்பு பூங்கா மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.19.50 லட்சம் செலவில் இப்பூங்காவில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்றது. மேலும் புராதன நகர மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.49 லட்சம் செலவில் நாமக்கல் மலைக்கோட்டையை சுற்றியுள்ள தார் சாலையும், ரூ.23.50 லட்சம் செலவில் வாகன நிறுத்துமிடமும், ரூ.9.50 லட்சம் செலவில் தெரு விளக்குகளும் ரூ.18 லட்சம் செலவில் கமலாலய குளம் மேம்பாட்டு பணிகளும் நடைபெற்றன.

    இந்த மேம்ப டுத்தப்பட்ட நேரு பூங்கா மக்கள் பயன்பாட்டுக்கு 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து பூங்கா நுழைவு கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்பட்டு வருகிறது.இந்த பூங்கா ஒதுக்குப்புறமாக இருப்பதாலும், வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லாததாலும் ெபாதுமக்கள் கோட்டை சாலை உழவர் சந்தை அருகே உள்ள நகராட்சிக்கு சொந்தமான செலம்ப கவுண்டர் பூங்காவிற்கு படையெடுக்கின்றனர். நாள் ஒன்றுக்கு சராசரியாக 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அங்கு செல்கின்றனர்.

    இதனால் நேரு பூங்காவிற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே வந்து செல்கின்றனர். இப்பூங்காவில் கட்டணம் வசூலிக்கப்பட்டும் போதிய பராமரிப்பு இல்லாததால் விளையாட்டு உபகரணங்கள் உடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. பூங்கா உட்பகுதியில் பேவர் பிளாக் கற்களால் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கற்களும் பெயர்ந்து கிடக்கிறது. முட் புதர்களும், ெசடிகளும் நிறைந்து காணப்படுகிறது. இதை காதல் ஜோடிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் கள்ளக்காதல் ேஜாடிகளும் இங்கு உலா வருகின்றனர்.

    சமூக விரோதிகளின் கூடாரமாக இப்பூங்கா திகழ்கிறது. குறிப்பாக மது குடித்து விட்டு, உட்காருவதற்காக அமைக்கப்பட்டுள்ள இருக்கையை ஆக்கிரமித்து படுத்து தூங்குகின்றனர். இதனால் பூங்காவிற்கு பொதுமக்கள் வருகை வெகுவாக குறைந்துள்ளது.

    இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    நேரு பூங்காவில் காதல் ஜோடிகளின் வருகையும், அவர்களின் செயல்பாடும் முகம் சுழிக்க வைக்கிறது. அதேபோன்று சமூகவிரோதிகள் இங்கு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். மது குடிக்கின்றனர், பீடி, சிகரெட் குடித்தபடி அங்கும், இங்கு மாக சுற்றி திரிகின்றனர். இதனால் பூங்காவில் சிறிது நேரம் உட்கா ருவதற்கே பயமாக உள்ளது. பூங்காவை பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பூங்காவில் 2 நாட்கள் காய்கறி கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
    • சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் காய்கறிகளை கொண்டு சிற்பங்களை அமைக்க உள்ளனர்.

    ஊட்டி,

    கோத்தகிரி நேரு பூங்காவில் கோடை சீசனையொட்டி 30 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணியை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் தொடங்கி வைத்தார்

    இந்த பூங்காவில் மலர்த்தோட்டம், அழகிய புல்தரை, ரோஜா பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டு பூங்கா ஆகியவைகளுடன் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் அமைந்துள்ளது. இந்த பூங்கா பேரூராட்சி நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    நேரு பூங்காவையொட்டி புகழ்பெற்ற காந்தி மைதானமும், பூங்கா வளாகத்திலேயே ஆதிவாசி இன மக்களான கோத்தர் இன மக்களின் குல தெய்வமான பழமையான அய்யனார், அம்மனோர் கோவில் அமைந்துள்ளது

    இந்த பூங்காவில் 2 நாட்கள் காய்கறி கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதிலும் இருந்து பல்வேறு மாவட்டங்கள் பங்கேற்று சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் காய்கறிகளை கொண்டு சிற்பங்களை அமைக்க உள்ளனர்.

    நேரு பூங்கா மற்றும் காய்கறி கண்காட்சியை கண்டு களிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவதை முன்னிட்டு பூங்காவை கோடை சீசனுக்குள் மேம்படுத்தி, தயார் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்கான பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

    இதன் ஒரு பகுதியாக பூங்காவை மேம்படுத்த கோத்தகிரி பேரூராட்சி மூலம் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பூங்காவை சுற்றி பாதுகாப்பு சுவர் கட்டும் பணி, கழிப்பிடங்களை புதுப்பிக்கும் பணி, சிறுவர் பூங்காவில் கூடுதல் விளையாட்டு உபகரணங்கள் பொருத்தும் பணி, வண்ண விளக்குகளுடன் செயற்கை நீரூற்று அமைக்கும் பணி, நடைபாதைகளை சீரமைத்து வர்ணம் பூசும் பணி உள்ளிட்ட பணிகள் நிறைவு பெற்றன.

    இதனால் பூங்கா புதுப்பொலிவுடன் திகழ்கிறது. மேலும் பூங்கா நுழைவு வாயிலில் டிக்கெட் கவுண்டர் கட்டும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பூங்காவில் தரையில் வளர்ந்துள்ள புல்களை எந்திரங்கள் மூலம் வெட்டி சமன் செய்து, பசுமையாக மாற்ற ஸ்ப்ரிங்ளர் மூலம் தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது.

    ரோஜா பூங்காவில் உள்ள ரோஜா மலர் செடிகளுக்கு கவாத்து செய்யப்பட்டு உள்ளது. 30 ஆயிரம் மலர் நாற்றுகள் மேலும் கோடை சீசனுக்காக பல்வேறு ரகங்களை சேர்ந்த 30 ஆயிரம் மலர் நாற்றுகள் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

    மலர் நாற்றுகளை நடவு செய்வதற்காக மண்ணை பதப்படுத்தி, மண்ணுடன் இயற்கை உரத்தை கலந்து மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கியது.

    இதில் நீலகிரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் இப்ராகிம் ஷா கலந்துகொண்டு நாற்றுக்களை நடவு செய்து பணியைத் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் ஜெயகுமாரி, துணைத் தலைவர் உமா நாத், செயல் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் உள்பட பேரூராட்சி அலுவலர்கள், மன்ற உறுப்பினர்கள், பூங்கா ஊழியர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டு மலர் நாற்றுக்களை நடவு செய்தனர்.

    இந்த பணிகள் அனைத்தும் ஒரு வார காலத்திற்குள் முடிவடைந்து வரும் மார்ச் மாத தொடக்கத்தில் மலர்கள் பூத்து குலுங்குவதுடன், காய்கறி கண்காட்சிக்கு பூங்கா தயாராகி விடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×